நல்ல பண்புகள்

by Vijay Mayilsamy

Video Thumbnail

நல்ல பண்புகள்

நல்ல பண்புகள்" என்பது ஒரு மனிதர் மற்றவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு வாழ்க்கை நடத்தல் கோட்பாடு ஆகும்.

பண்பு என்பது வாங்கக்கூடிய ஒரு பொருளல்ல.அது உங்கள் இதயத்தில் நிரந்தரமாக நீங்கள் எடுக்கும் முடிவுகளால் கட்டமைக்கப்படுகிறது. பண்பு என்பது நல்ல கருத்துக்களை ஏற்று வாழ்ந்து காட்டுவதே ஆகும், ஒரே நாளில் மாற்றி அமைத்து கொள்ள முடிவதல்ல.கால சூழ்நிலைக்கு ஏற்ப நற்பண்புகளை அதிகமாக கட்டமைத்து உங்கள் வாழ்வை செதுக்குங்கள் சிற்பி போல...

நல்ல பண்புகள்-நல்லொழுக்கம், பொறுமை, அன்பு, இரக்கம்,நேர்மை,தன்னடக்கத்தன்மை, கல்வி,அறிவுடைமை,ஒழுக்கம்,நல்லினத்தாரோடு சேர்தல்,நன்றியறிதல்,இன்சொல், எவருக்கும் இன்னாதன செய்யாமை,ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு சேர்தல், அறிவுடைமை, மனக்கஷ்டத்தை சமாளிக்கும் திறன், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன், பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன், தலைமைப் பண்புகள், நல்ல பேச்சாற்றல் போன்ற பலவற்றைக் குறிக்கும்.

எதிலும் தெளிவு வேண்டும்:

முதலில் நீங்கள் உங்கள் வாழ்க்கை பண்புகளை மாற்ற முயற்சிப்பதற்கு முன்பாக,உண்மையிலேயே உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்ற தெளிவு வேண்டும். வாழ்க்கையில் நமக்கு இருக்கும் தெளிவுதான் அதை சிறப்பாக கொண்டு செல்வதற்கான தைரியத்தை நமக்குக் கொடுக்கும். வாழ்க்கையில் புரிதல் இல்லாதபோது தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்காது. அதற்கு மாறாக தோல்வியால் எதையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வந்துவிடும்.

ரிஸ்க் எடுத்தால் மட்டுமே வாழ்க்கை இனிக்கும்:

நீங்கள் நினைக்கலாம் வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால் பிரச்சனைகள் தான் வரும் என்று.ஆனால் நீங்கள் எவ்விதமான ரிஸ்க் எடுக்காமல் இருப்பதாலும் பல பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படத்தான் போகிறது. உண்மையிலேயே தைரியமாக ரிஸ்க் எடுத்தவர்கள் தன் வாழ்க்கையில் நல்ல நிலையையே அடைந்திருக்கிறார்கள். ரிஸ்க் எடுப்பதும் வாழ்க்கையில் பண்பின் ஒரு அங்கம்தான்.இதைத் தவிர்ப்பதால் சிறந்த அனுபவங்களை நீங்கள் இழக்கிறீர்கள்.

ரிஸ்க் எடுப்பது என்பது வேறு! குறுக்கு வழிகளை தேர்வு செய்து, வாழ்க்கை நடத்துவது என்பது வேறு!

  1. வாழ்வில் அனைத்திற்கும் கேள்வி கேளுங்கள்: நீங்கள் கண்ணால் காண்பது காதால் கேட்பது அனைத்தையும் அப்படியே நம்ப வேண்டாம். அனைத்தையும் கேள்வி கேட்கும் மனநிலை மிக முக்கியம்.இன்றைய நவீன உலகில் நாம் எதை நம்புவது நம்பாமல் போவது என்பதே தெரியவில்லை. எனவே இணையத்தில் காணொளிகள் பார்க்கிறீர்கள், எழுதி வைத்துள்ள ஆர்ட்டிகல்ஸ் படிக்கிறீர்கள் என்றால், அது எந்த அளவுக்கு நமக்கு ஒத்துவரும்?என்ற கேள்வி மிக முக்கியம்.இத்தகைய மனநிலை உங்களுக்குத் தேவையான சரியான விஷயங்களை பண்பாகத் தேர்வு செய்ய உதவும். இரக்ககுணம் வேண்டும்: காலங்கள் மாற மாற நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்டு வருகிறோம்.அந்த காலத்தில் இருந்தது போல அனைவரும் ஒன்றாக சேர்ந்து சில செயல்களை செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மை இப்போது இல்லை.தன் வீடு,தன் சொத்து,தன் குடும்பம் என அனைத்தையும் பிரித்து பார்க்கும் மனோபாவம் மக்களுக்கு அதிகரித்துவிட்டது.எனவே பிறரிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல், இரக்க குணத்துடன் இருப்பது முக்கியமாகும். ஆனால் இரக்ககுணம் கொண்டு வாழ்கிறேன் என்ற பெயரில் ஏமாளித் தனமாக இருக்க கூடாது.எனவே இந்த பண்பை நீங்கள் தர்மம் செய்வதில் பொருத்திக்கொள்ள கூடாது! எதிலும் பொறுமை தேவை: இப்போது அனைவருக்குமே எல்லா விஷயங்களிலும் உடனடி மன நிறைவு தேவைப்படுகிறது.எதை செய்தாலும் உடனடியாக அதில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அனைத்தும் சீக்கிரமாக கிடைக்க வேண்டும் என நினைப்பதே பல மன, பொருளாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே அனைத்திலும் பொறுமையாக இருந்து கையாளும் பண்பு மிக மிக முக்கியம். பொறுமையாக உங்களுக்கான செயல்களை நீங்கள் செய்யுங்கள்,நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் தானாக நடக்கும்.எதிலும் அவசரகதியில் முடிவெடுக்காதீர்கள்.

நற்பண்புகள் என்பதே தனக்கும் பிறர்க்கும் தீமை இல்லாததை நினைத்தலும், அதன்வழி நடத்தலும் தானே!அப்படி பண்புகள் என்று பண்புச் செயல்களை பட்டியலிட முயன்றால் அது நீளும் என்பது மட்டுமல்ல, அவை சூழ்நிலைக்கேற்ப மாறியமையும்.

'உண்மை பேசுவதே' முதன்மைப் பண்பு, அது மற்ற பண்புகளைத் தானாகவே அமைத்துத்தரும் என்பதோடு உலகோர் மனதில் நம்மை உண்மைப் புகழொடு நிறுத்தும். எனவே வாய்மைவழி நடத்தல் என்ற ஒரு பண்பை மட்டும் கட்டாயம் என்றறிந்து அதை கடைபிடைத்தாலே போதும்.